காத்தான்குடி கலாசார பிரிவு நடாத்தும் மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்சிப் பட்டறையானது இன்று (20) செவ்வாய்க்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இப்பயிற்சிப்பட்டறையானது மாணவர்களின் கலை ஆர்வத்தினை மேம்படுத்தவும் , பாடசாலை மட்ட சஞ்சிகை போட்டிக்கான தரமான ஆக்கங்களை மாணவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவும், மாணவர்களுக்கு சிறுகதை எழுதுவது தொடர்பான பயிற்சிகளை வளவாளராக கலந்து கொண்ட ஓட்டமாவடி அறபாத்,கலாபூஷணம் பாத்திமா முஹம்மட் அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.



இப்பயிற்சியில் தரம் 1-13 வரை கல்வி கற்கும் 180 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் எம்ஐ.எம்.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்துஉஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.



துரித சேவையினை வழங்கும் திட்டத்தின் கீழ் மக்களுக்கு தேவையான கடவுச் சீட்டுக்களை சிரமமின்றி அவர்களுடைய மாவட்டங்களில் பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடவுச் சீட்டினை வழங்கும் ஆரம்ப நிகழ்வு 2023.06.22 ஆந் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டதுடன் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்ரா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்வோர் தெரிவு செய்யப்பட்ட புகைப்பட நிலையங்களுக்கு சென்று புகைப்படம் மற்றும் பதிவினை மேற்கொண்டு 03 நாட்களில் துரித சேவையாயின் ரூபா 15000 உம் 14 நாட்களில் பெற்றுக் கொள்ளும் சாதாரண சேவையாயின் ரூபா 5000 பணத்தினை இலங்கை வங்கி கிளையில் செலுத்திய பின் தங்களது கையடக்க தொலைபேசிக்கு பிரதேச செயலகத்திற்கு செல்லும் நாள், மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட குறுந்தகவல் கிடைத்ததும் பிரதேச செயலக ஆட்பதிவு திணைக்கள பிரிவிற்கு சென்று கைவிரல் அடையாளம் மற்றும் கையொப்பத்தினையும் உறுதி செய்து கடவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையினை நிறைவு செய்து கொள்ள முடியும்.
மேலும் கையடக்கத் தொலைபேசி மற்றும் வேறு முறைமைகள் (Computer) மூலம் இணையத்தில் கடவுச் சீட்டு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தவர்கள், புகைப்பட நிலையத்தில் புகைப்படங்களை பெறாதவர்கள் பிரதேச செயலகத்திற்கு சென்று புகைப்படம், மற்றும் கைவிரல் அடையாளம் ஆகியவற்றை வழங்கி கடவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையினை மேற் கொள்ள முடியும்.
இந் நிகழ்விற்கு ஆட்பதிவு திணைக்களத்திற்குரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.எவ்.பீ.எம்.அஹமட், திருமதி.கே.விஜயகுமார், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கீ.குகன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு புகைப்பட நிலைய சம்மேளனத்தின் தலைவர் மற்றும் செயலாளர், தொழில்நுட்ப ஆலோசகர், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது இன்று (19) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டத்தின் அனைத்து வேலைகளும் நிறைவு பெற்றுள்ளதாகவும் இப்பணிக்காக ஈடுபடுத்தப்பட்ட உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் பிரதேச செயலாளரால் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் உணவுப் பாதுகாப்பு வேலைத் திட்டத்தினை மிக விரைவாக அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நிறைவு செய்யுமாறு உதவிப் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அத்துடன் பிரதேச செயலகத்தினால் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் போது அதனோடு தொடர்புடைய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும், கள உத்தியோகத்தர்கள் களவிஜயத்தினை மேற்கொள்ளும் போது வழங்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதி செய்து பிரதேச செயலாளருக்கு அறிக்கையிடப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
வெளிக்கள உத்தியோகத்தர்கள் கள விஜயத்தின்போது டெங்கு மற்றும் தொற்றா நோய் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கும் , பொது மக்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டுமெனவும் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளிநாட்டில் தொழில் புரியும் மற்றும் தொழில் புரிந்து 2 வருடங்களில் நாடு திரும்யுள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ரூபா 8000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரினால் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காணி, முதியோர் செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர், WDO, PDO, ஆகிய உத்தியோகத்தர்களிடம் வேலைகள் தொடர்பான முன்னேற்றங்களை பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.
இக் கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
























