காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி, பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத் அவர்களின் தலைமையில் அதிகாரசபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேச அதிகாரசபையின் செயலாளர், கலாசார உத்தியோகத்தர்கள்மற்றும் அதிகாரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் போது பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் கலை, கலாசார மற்றும் சமூக நடவடிக்கைகள் தொடர்பிலும், அவற்றை மேலும் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
மேலும், பிரதேசத்தின் கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் அவற்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அதிகாரசபையின் செயற்பாடுகளை வலுப்படுத்துவதுடன், பிரதேசத்தின் கலை, கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாத்து அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.





















