காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோரின் வழிகாட்டலிலும் ஒழுங்கு படுத்தலிலும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் ( CMEV ) ஏற்பாட்டில் குடியியல் உரிமைகள் கடமைகள் மற்றும் முழுமையான ஜனநாயகம் தொடர்பான சமூக விழிப்புணர்வு கருத்தரங்கானது 2023.09.12 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கலந்து கொண்டதுடன்
இக்கருத்தரங்கின் வளவாளர்களாக தேசிய இணைப்பாளர்
A.M.L.விக்டர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சியானி விஜயசுந்தர ஆகியோர் கலந்து கொண்டு ஜனநாயகத்திற்கு தேர்தல் அவசியம், தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தல், ஜனநாயக உரிமைகள், பிரஜைகளின் பொறுப்புக்கள் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியம்சம் , மாற்றுத் திறனாளிகள் சமூகத்தினருக்கும் சமமான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்பதற்கான தேர்தல் சட்டங்கள் போன்ற பல்வேறு விடயங்களுக்கான விளக்கங்களையும் தெளிவுபடுத்தல்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மகளிர் சங்க உறுப்பினர்கள், விசேட தேவையுடையோர் அமைப்பின் உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி மகா சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது (11) ஆந் திங்கட்கிழமை திகதி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் சமூக நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்காக தெரிவு செய்யப்பட்டோரில் வங்கிக் கணக்குகளை திறந்தவர்களின் எண்ணிக்கை, திறக்காதவர்களின் எண்ணிக்கை என்பவற்றை கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ரீதியாக ஆராயப்பட்டு திறக்கப்படாமை க்கான காரணத்தை சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்தாலோசித்து தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு உதவிப் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் சமூக நலன்புரி நன்மைகள் தொடர்பான மேன்முறையீடுகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.அதற்கான சரியான தகவல்களை உத்தியோகத்தர்கள் வழங்குமாறும் உதவிப் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
2023.09.12 ஆந் திகதி சமுர்த்தியினால் தெரிவு செய்யப்பட்ட 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் வாக்குரிமை, கடமைகள், தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வும் இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து HRDA, Project manager, DMC, RDO, Forien Do, மற்றும் WDO,ECDO, Environment Do, CULTUREL DO, கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்,DO (மத்தியஸ்தம்) ஆகிய உத்தியோகத்தர்களிடம் வேலை முன்னேற்றம் தொடர்பாக உதவிப் பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.





கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது 2023.09.04. ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரி அவர்கள் கலந்து கொண்டதுடன் மக்களை சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து அவர்களை ஓய்வூதியக்காரர்களாக மாற்றி நன்மையடையச் செய்து 2023 ம் ஆண்டிலும் தேசிய அடைவு மட்டத்தை அடையவேண்டும் எனவும் அதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும் செயற்படவேண்டும் எனவும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
அடுத்து சமூக நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்காக தெரிவு செய்யப்பட்ட 3354 பேரில் ஜூலை 31 ஆந் திகதிக்கு முன்னர் வங்கிக் கணக்குகளை திறந்த 2041 பேரில் 1354 பேருக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட போதிலும் 684 நபர்களின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஏனைய காரணங்களால் அவர்களது கொடுப்பனவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஜூலை 31 க்கு பின்னர் வங்கிக் கணக்குகளை திறந்த கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாத ஏனையவர்களுக்கு எதிர்வரும் வாரங்களில் வழங்கப் படும்.அத்துடன் 5345 மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதற்கான மேன்முறையீடுகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் அனைத்து உத்தியோகத்தர்களும் வழங்குவதன் மூலம் இலகுவாக தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியுமென பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சௌபாக்கியா, கிராம சக்தி வேலைத்திட்டம், சமுர்த்தி, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், காணி, சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் பிரதேச தொகை மதிப்பு உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் (Environment), சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய உத்தியோகத்தர்களிடம் தங்களது வேலை முன்னேற்றங்கள் தொடர்பாக பிரதேச செயலாளரினால் மீளாய்வு செய்யப்பட்டது.





தேசிய உணவு உற்பத்தி வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள சமுதாய அடிப்படை அமைப்புக்களினால் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிற்கும் வழங்கப்பட்ட விதைகளை கொண்டு நடுகை செய்யப்பட்ட பூசணிக்காய் அறுவடை செய்யும் விழாவானது 2023.09.08 ஆந் திகதி 165B கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வறுவடை விழாவிற்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், வலய முகாமையாளர் SHM.முஸம்மில், கருத்திட்ட முகாமையாளர் திருமதி S.கண்ணன், மற்றும் பிரிவு SDO திருமதி.FA.முனாப், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான MHM.அன்வர், MSM.நூர்தீன், ALHM.இப்றாஹிம், பிரிவிற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ABS.நுஸ்ரா , பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மூன்று வீடுகளில் மூன்றாவது வீடான 167B புதிய காத்தான்குடி கிழக்கு பிரிவில் வசிக்கும் எவ்.சபானா என்பவரது சௌபாக்கியா ரன்விமன 3வது வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 30.08.2023 ஆந் திகதி புதன்கிழமை உதவி பிரதேச செயலாளார் திருமதி .எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை முகாமையாளர், வலய முகாமையாளர், சமூக அபிவிருத்தி உதவியாளர், காத்தான்குடி பள்ளி வாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பைத்துல் சக்காத் நிதிய தலைவர் T.M அன்சார் , மற்றும் உறுப்பினர்களும் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசாங்கத்தினால் இவ் வீட்டிற்காக ரூ.750,000/= நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






















