






காத்தான்குடி பிரதேச செயலகம் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் (National Productivity) Citizen Mirror - Divisional Productivity Index 1.0 போட்டியில் மாவட்ட ரீதியில் 06 ஆம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் 25ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது.காத்தான்குடி பிரதேச செயலகம் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் (National Productivity) Citizen Mirror - Divisional Productivity Index 1.0 போட்டியில் மாவட்ட ரீதியில் 06 ஆம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் 25ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது.2026.06.16 ஆம் திகதி செவ்வாய்கிழமைபொது நிருவாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் Colombo Galle Face Hotel இல் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் அவர்களும், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்எம்.ஐ. சுல்பிகார் அலிஅவர்களும் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சார்பில் கலந்து கொண்டு இவ்விருதினைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இச்சாதனைக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.






காத்தான்குடி பிரதேச செயலக கணனிப் பிரிவு கடந்த காலங்களில் தொடர்ச்சியாக காத்தான்குடி பிரதேச மக்களின் நலன் கருதி பிரதேசத்துக்கான சேவைகளை மின்னியலாக்கம் செய்கின்ற செயற்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
அதில் ஒரு அங்கமாக 15.06.2026 திங்கள் அன்று பிற்பகல் 2.30 மணியளவில் காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி S. சில்மியா அவர்களினால் இரண்டு செயலிகள் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கணனிப்பிரிவு மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.M. றஸுல்ஷா அவர்களினால் வடிவமைக்கப்பட்டு செயற்பாட்டுக்கு வருகின்ற நான்காவது செயற்திட்டமாக இது முன் வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் அவர்களின் உரையில் கடந்த காலங்களில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கணனிப்பிரிவின் அயராத முயற்சியின் காரணமாக காத்தான்குடி மக்களின் நலன் கருதி அவர்களது சேவைகளை இலகு படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சேவை மிகவும் பொருத்தமானதும், பாராட்டுக்குரியதும் என குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த சேவையின் ஊடாக பொது மக்கள் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சேவைகளை அல்லது பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் போன்றவர்களை சந்திப்பதற்கான முன்பதிவுகளை பெற்றுக் கொள்வதோடு காத்தான்குடி பிரதேச செயலக வெளியிடுகின்ற செய்திகளையும் மற்றும் அலுவலகம் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் தொடர்பிலான ஏதேனும் முறைப்பாடுகள் பொதுமக்களுக்கு இருப்பின் அதனை நேரடியாக பிரதேச செயலாளருக்கு அனுப்புவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. www.dskattankudy.com என்ற இணையதள முகவரியின் ஊடாக பொதுமக்கள் குறித்த சேவையினை அணுக முடியும்.
அதே போன்று இத்தனை காலமும் நீண்ட காலதாமதங்களை ஏற்படுத்திய வியாபாரப் பெயர் பதிவினை இனிவரும் நாட்களில் இணையம் மூலமாக பொது மக்கள் தங்களது பதிவுகளை மேற்கொண்டு வியாபாரப் பதிவுச் சான்றிதழ்களை மிகவும் துரிதமாகப் பெற்றுக் கொள்வதற்கான சேவையை www.bnrdskky.com என்ற இணையதள முகவரி ஊடாக பொதுமக்கள் அணுக முடியும் என்பதனை பிரதேச செயலகம் கேட்டுக்கொள்கின்றது.





காத்தான்குடி பிரதேச செயலக கணனிப் பிரிவு கடந்த காலங்களில் தொடர்ச்சியாக காத்தான்குடி பிரதேச மக்களின் நலன் கருதி பிரதேசத்துக்கான சேவைகளை மின்னியலாக்கம் செய்கின்ற செயற்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
அதில் ஒரு அங்கமாக 15.06.2026 திங்கள் அன்று பிற்பகல் 2.30 மணியளவில் காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி S. சில்மியா அவர்களினால் இரண்டு செயலிகள் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கணனிப்பிரிவு மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.M. றஸுல்ஷா அவர்களினால் வடிவமைக்கப்பட்டு செயற்பாட்டுக்கு வருகின்ற நான்காவது செயற்திட்டமாக இது முன் வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் அவர்களின் உரையில் கடந்த காலங்களில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கணனிப்பிரிவின் அயராத முயற்சியின் காரணமாக காத்தான்குடி மக்களின் நலன் கருதி அவர்களது சேவைகளை இலகு படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சேவை மிகவும் பொருத்தமானதும், பாராட்டுக்குரியதும் என குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த சேவையின் ஊடாக பொது மக்கள் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சேவைகளை அல்லது பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் போன்றவர்களை சந்திப்பதற்கான முன்பதிவுகளை பெற்றுக் கொள்வதோடு காத்தான்குடி பிரதேச செயலக வெளியிடுகின்ற செய்திகளையும் மற்றும் அலுவலகம் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் தொடர்பிலான ஏதேனும் முறைப்பாடுகள் பொதுமக்களுக்கு இருப்பின் அதனை நேரடியாக பிரதேச செயலாளருக்கு அனுப்புவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. www.dskattankudy.com என்ற இணையதள முகவரியின் ஊடாக பொதுமக்கள் குறித்த சேவையினை அணுக முடியும்.
அதே போன்று இத்தனை காலமும் நீண்ட காலதாமதங்களை ஏற்படுத்திய வியாபாரப் பெயர் பதிவினை இனிவரும் நாட்களில் இணையம் மூலமாக பொது மக்கள் தங்களது பதிவுகளை மேற்கொண்டு வியாபாரப் பதிவுச் சான்றிதழ்களை மிகவும் துரிதமாகப் பெற்றுக் கொள்வதற்கான சேவையை www.bnrdskky.com என்ற இணையதள முகவரி ஊடாக பொதுமக்கள் அணுக முடியும் என்பதனை பிரதேச செயலகம் கேட்டுக்கொள்கின்றது.





காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டமானது 2026.06.10ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. ஏ.எஸ். சசிகரன் மற்றும் கணக்காய்வு அத்தியட்சகர் திரு.ரொபர்ட் அலோசியஸ் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
மேலும் கணக்காளர் ஏ.ஆர்.அஹமட் முப்லி அவர்களால் கணக்கறிக்கைகள், உள்ளக கணக்காய்வு பிரிவு அறிக்கை என்பன விளக்க காட்சிகள் (Presentation) மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன் இந் நிகழ்விற்கு பிரதேச செயலகத்தின் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள்,
பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள்,பதவி நிலை உதவியாளர்கள், மற்றும் விடய உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இறுதியாக கணக்காளர் ஏ.ஆர்.அஹமட் முப்லிஅவர்களது நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.


















