காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டமானது 2026.06.10ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. ஏ.எஸ். சசிகரன் மற்றும் கணக்காய்வு அத்தியட்சகர் திரு.ரொபர்ட் அலோசியஸ் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
மேலும் கணக்காளர் ஏ.ஆர்.அஹமட் முப்லி அவர்களால் கணக்கறிக்கைகள், உள்ளக கணக்காய்வு பிரிவு அறிக்கை என்பன விளக்க காட்சிகள் (Presentation) மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன் இந் நிகழ்விற்கு பிரதேச செயலகத்தின் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள்,
பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள்,பதவி நிலை உதவியாளர்கள், மற்றும் விடய உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இறுதியாக கணக்காளர் ஏ.ஆர்.அஹமட் முப்லிஅவர்களது நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.


















