2931
சர்வதேச போதைப்பொருள் தடுப்பு தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் 2026.06.26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் அவர்களினால் இவ் ஓவியக் கண்காட்சியானது உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சந்திரகாந்தன் அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கண்காட்சியில், காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களால் வரையப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு, ஆரோக்கியமான சமூகத்தினை கட்டியெழுப்பல் மற்றும் சமூக விழிப்புணர்வை வலியுறுத்தும் பல்வேறு கருத்துமிக்க ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. ஹன்சுல் ஷிஹானா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். றஊப், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். ஜரூப், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ஓவியங்களை பார்வையிட்டு, மாணவர்களின் கலைத்திறன், படைப்பாற்றல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை பிரதிபலிக்கும் ஆக்கங்களைப் பாராட்டினர்.
3233
அத்துடன் இந்நிகழ்வின் போது பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெயிக் எம்.ஐ.எம்.ஜவாஹிர் மௌலவி அவர்களினால் போதைப் பொருள் அற்ற சமூகத்தை நோக்கிய விழிப்புணர்வு உரையாடல் ஒன்று மாணவர்கள் மத்தியில் இடம்பெற்றது.
இதன் போது இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள் இளம் தலைமுறையினரிடையே போதைப்பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்துவதோடு, பொறுப்புணர்வும் நற்பண்புகளும் நிறைந்த ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கான சிறந்த தளமாக அமையும் எனவும் கலாசார உத்தியோகத் தரினால் வலியுறுத்தப்பட்டது.
மேலும், மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொணருவதோடு மட்டுமல்லாமல், போதைப்பொருள் பாவனையின் பாதகமான விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வினை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் பரப்பிய அர்த்தமுள்ள நிகழ்வாக இவ் ஓவியக் கண்காட்சி அமைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
263928

காத்தான்குடி பிரதேச செயலகம் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் (National Productivity) Citizen Mirror - Divisional Productivity Index 1.0 போட்டியில் மாவட்ட ரீதியில் 06 ஆம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் 25ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது.காத்தான்குடி பிரதேச செயலகம் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் (National Productivity) Citizen Mirror - Divisional Productivity Index 1.0 போட்டியில் மாவட்ட ரீதியில் 06 ஆம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் 25ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது.2026.06.16 ஆம் திகதி செவ்வாய்கிழமைபொது நிருவாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் Colombo Galle Face Hotel இல் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் அவர்களும், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்எம்.ஐ. சுல்பிகார் அலிஅவர்களும் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சார்பில் கலந்து கொண்டு இவ்விருதினைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இச்சாதனைக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ct3ct 2ctct4ct6ct5

காத்தான்குடி பிரதேச செயலக கணனிப் பிரிவு கடந்த காலங்களில் தொடர்ச்சியாக காத்தான்குடி பிரதேச மக்களின் நலன் கருதி பிரதேசத்துக்கான சேவைகளை மின்னியலாக்கம் செய்கின்ற செயற்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.

அதில் ஒரு அங்கமாக 15.06.2026 திங்கள் அன்று பிற்பகல் 2.30 மணியளவில் காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி S. சில்மியா அவர்களினால் இரண்டு செயலிகள் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கணனிப்பிரிவு மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.M. றஸுல்ஷா அவர்களினால் வடிவமைக்கப்பட்டு செயற்பாட்டுக்கு வருகின்ற நான்காவது செயற்திட்டமாக இது முன் வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் அவர்களின் உரையில் கடந்த காலங்களில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கணனிப்பிரிவின் அயராத முயற்சியின் காரணமாக காத்தான்குடி மக்களின் நலன் கருதி அவர்களது சேவைகளை இலகு படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சேவை மிகவும் பொருத்தமானதும், பாராட்டுக்குரியதும் என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சேவையின் ஊடாக பொது மக்கள் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சேவைகளை அல்லது பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் போன்றவர்களை சந்திப்பதற்கான முன்பதிவுகளை பெற்றுக் கொள்வதோடு காத்தான்குடி பிரதேச செயலக வெளியிடுகின்ற செய்திகளையும் மற்றும் அலுவலகம் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் தொடர்பிலான ஏதேனும் முறைப்பாடுகள் பொதுமக்களுக்கு இருப்பின் அதனை நேரடியாக பிரதேச செயலாளருக்கு அனுப்புவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. www.dskattankudy.com என்ற இணையதள முகவரியின் ஊடாக பொதுமக்கள் குறித்த சேவையினை அணுக முடியும்.

அதே போன்று இத்தனை காலமும் நீண்ட காலதாமதங்களை ஏற்படுத்திய வியாபாரப் பெயர் பதிவினை இனிவரும் நாட்களில் இணையம் மூலமாக பொது மக்கள் தங்களது பதிவுகளை மேற்கொண்டு வியாபாரப் பதிவுச் சான்றிதழ்களை மிகவும் துரிதமாகப் பெற்றுக் கொள்வதற்கான சேவையை www.bnrdskky.com என்ற இணையதள முகவரி ஊடாக பொதுமக்கள் அணுக முடியும் என்பதனை பிரதேச செயலகம் கேட்டுக்கொள்கின்றது.WImage 2026 06 16 at 09.07.57 1WImage 2026 06 16 at 09.07.58WImage 2026 06 16 at 10.12.06WImage 2026 06 16 at 10.12.11 1WImage 2026 06 16 at 10.12.10 2WImage 2026 06 16 at 10.12.07 1

காத்தான்குடி பிரதேச செயலக கணனிப் பிரிவு கடந்த காலங்களில் தொடர்ச்சியாக காத்தான்குடி பிரதேச மக்களின் நலன் கருதி பிரதேசத்துக்கான சேவைகளை மின்னியலாக்கம் செய்கின்ற செயற்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.

அதில் ஒரு அங்கமாக 15.06.2026 திங்கள் அன்று பிற்பகல் 2.30 மணியளவில் காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி S. சில்மியா அவர்களினால் இரண்டு செயலிகள் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கணனிப்பிரிவு மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.M. றஸுல்ஷா அவர்களினால் வடிவமைக்கப்பட்டு செயற்பாட்டுக்கு வருகின்ற நான்காவது செயற்திட்டமாக இது முன் வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் அவர்களின் உரையில் கடந்த காலங்களில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கணனிப்பிரிவின் அயராத முயற்சியின் காரணமாக காத்தான்குடி மக்களின் நலன் கருதி அவர்களது சேவைகளை இலகு படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சேவை மிகவும் பொருத்தமானதும், பாராட்டுக்குரியதும் என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சேவையின் ஊடாக பொது மக்கள் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சேவைகளை அல்லது பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் போன்றவர்களை சந்திப்பதற்கான முன்பதிவுகளை பெற்றுக் கொள்வதோடு காத்தான்குடி பிரதேச செயலக வெளியிடுகின்ற செய்திகளையும் மற்றும் அலுவலகம் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் தொடர்பிலான ஏதேனும் முறைப்பாடுகள் பொதுமக்களுக்கு இருப்பின் அதனை நேரடியாக பிரதேச செயலாளருக்கு அனுப்புவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. www.dskattankudy.com என்ற இணையதள முகவரியின் ஊடாக பொதுமக்கள் குறித்த சேவையினை அணுக முடியும்.

அதே போன்று இத்தனை காலமும் நீண்ட காலதாமதங்களை ஏற்படுத்திய வியாபாரப் பெயர் பதிவினை இனிவரும் நாட்களில் இணையம் மூலமாக பொது மக்கள் தங்களது பதிவுகளை மேற்கொண்டு வியாபாரப் பதிவுச் சான்றிதழ்களை மிகவும் துரிதமாகப் பெற்றுக் கொள்வதற்கான சேவையை www.bnrdskky.com என்ற இணையதள முகவரி ஊடாக பொதுமக்கள் அணுக முடியும் என்பதனை பிரதேச செயலகம் கேட்டுக்கொள்கின்றது.WImage 2026 06 16 at 09.07.57 1WImage 2026 06 16 at 09.07.58WImage 2026 06 16 at 10.12.06WImage 2026 06 16 at 10.12.11 1WImage 2026 06 16 at 10.12.10 2WImage 2026 06 16 at 10.12.07 1

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டமானது 2026.06.10ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. ஏ.எஸ். சசிகரன் மற்றும் கணக்காய்வு அத்தியட்சகர் திரு.ரொபர்ட் அலோசியஸ் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

மேலும் கணக்காளர் ஏ.ஆர்.அஹமட் முப்லி அவர்களால் கணக்கறிக்கைகள், உள்ளக கணக்காய்வு பிரிவு அறிக்கை என்பன விளக்க காட்சிகள் (Presentation) மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன் இந் நிகழ்விற்கு பிரதேச செயலகத்தின் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள்,
பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள்,பதவி நிலை உதவியாளர்கள், மற்றும் விடய உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இறுதியாக கணக்காளர் ஏ.ஆர்.அஹமட் முப்லிஅவர்களது நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.1234

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top