காத்தான்குடி சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் தொழில் முயற்சியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்களுக்கு பொதியிடல் சம்பந்தமான பயிற்சியானது 2023.05.24 ஆந் திகதி பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சியானது பொதியிடல் தொடர்பான அறிமுகம், யுத்திகள், பொதியிடுவதற்கு தேவையான மூலப் பொருட்கள்,அவ் மூலப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் முகவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களின் சந்தேகங்கள் என்பவற்றை வளவாளராக கலந்து கொண்ட திரு.எவ்.ரஜீவ் சங்கர் (IDB) கலந்து கொண்டு தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பயிற்சிக்கு 20 சுய தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இறுதியாக பிற்பகல் 2.00 மணிக்கு சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.எஸ்.சனோகாந் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.






















