காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அரச மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால சிங்கள மொழிப் பாடநெறியானது கடந்த 2023.02.07 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டு அதன் இறுதி நாள் நிகழ்வானது 2023.05.21ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலாளர் திரு.உ .உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பாட நெறியில் 37 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இப்பாடநெறியினை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் பாடநெறியின் வளவாளராக கலந்து கொண்ட திரு.எஸ்.ஜெயராஜ் ஆசிரியருக்கு பிரதேச செயலாளரால் நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ஜே.எம்.ஜலால்தீன், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


























