சமூக பாதுகாப்புச் சபையின் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத் திட்டத்தில் பிரதேச மற்றும் தேசிய அடிப்படையில் இலக்கினை நிறைவு செய்த உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது 2023.05.15 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணப்பதிகாரி திரு.ஏ.எம்.அமீன் அவர்கள் கலந்து கொண்டனர்.
அந்தவகையில் சமூக பாதுகாப்புச் சபையின் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத் திட்டத்தில் பிரதேச மற்றும் தேசிய அடிப்படையில் இலக்கினை நிறைவு செய்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.SMM.றபீக், திருமதி.YIZ.யஸ்மின் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.AL.அப்துல் அஸீஸ் ஆகியோருக்கு மெச்சுரைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.




















