காத்தான்குடி நவ இலக்கிய மன்றம் காத்தான்குடி பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய "இலக்கிய சரம்" முதலாவது பல்சுவை நிகழ்வானது 2023.05.12 ஆந் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அல்ஹாஜ் MHM.இஸ்மாயில் ஓய்வு பெற்ற (SLES) அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாணவிகளின் குழுமம் பாடல்,நாடகம், வில்லுப்பாட்டு, மற்றும் பாவலர் சாந்தி முகைதீன் அவர்களது தலைமையில் கவியரங்கம்,செரண்டிப் முஸ்தபா குழுவினரின் நாடகமும் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு காத்தான்குடி பிரதேச கலாசார அதிகார சபையின் செயலாளர் திருமதி.SJM.ஜலால்தீன், கலாசார உத்தியோகத்தர் திரு.MIM.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்துஉஷா, மற்றும் பிரதேச கலைஞர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், சிறுவர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
























