காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயின் தீவிரத்தன்மை அதிகரித்துக் காணப்படுவதால் 2023.04.25 ஆந் திகதி தொடக்கம் டெங்கு கள விஜயம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்தவகையில் டெங்கு கள விஜய மீளாய்வு கூட்டமானது 2023.05.03 ஆந் திகதி புதன்கிழமை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் மனாறுல் ஹுதா பள்ளி வாயலிலும் நடைபெற்றது.
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திண்மக் கழிவகற்றல், தொழிற்சாலைகள் போன்ற பெரிய கட்டிடங்கள் காணப்படும் இடங்களில் பெரியளவில் நீர் தேங்கி காணப்படுவதால் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் நகரசபையினால் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இக் கூட்டத்திற்கு திரு.உ.உதயசிறிதர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், நகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



















