காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வருட இறுதி ஒன்றுகூடல் நிகழ்வானது 2022.01.19 ஆந் திகதி புதன்கிழமை புதிய காத்தான்குடி வங்கி முகாமையாளர் ஏ.எல்.இசட் பஹ்மி அவர்களது தலைமையில் காத்தான்குடி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வங்கி முன்னேற்ற செயற்பாடுகள், பொது மக்களுக்கும் சமுர்த்தி திட்டத்திற்கும் உள்ள தொடர்புகள், கடந்த கால முன்னேற்ற மீளாய்வுகள் ,வறுமை ஒளிப்பிற்கான நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக அதிதிகளால் விளக்கமளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கொவிட் 19 கொரோனா காலங்களில் தங்களது கடமைகளை சிறப்பாக மேற்கொண்ட சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களும், கௌரவ அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.எம்.சில்மியா , கணக்காளர் செல்வி.கே.சித்திரா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.பிரணவசோதி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜிட், காத்தான்குடி வங்கி முகாமையாளர் எஸ்.எச்.முஸம்மில், திட்ட முகாமையாளர் திருமதி.எஸ்.கண்ணன், மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரிப்பயிலுனர்கள், கணனிப்பயிலுனர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.



















