காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான மற்றும் திறன் மிக்க சேவைகளை வழங்கும் நோக்கில் ஏற்கனவே நடைமுறையில் காணப்பட்ட டிஜிட்டல் சேவைகள் மீளாய்வு செய்யப்பட்டு, புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இப்புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் சேவைகளின் அறிமுக நிகழ்வு கடந்த 25.05.2026 திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜுத் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர்,சமுர்த்தி தலைமையக முகாமையாளர், பிரிவு தலைவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது,
1. Front office management system.
(முன்னரங்கு அலுவலக முகாமைத்துவ முறைமை)
2. Public Portal for appointment and complaints.
(முன்பதிவு மற்றும் முறைப்பாட்டு இணையத் தளம்).
3. Inventory management system.
4. Citizen management system.
ஆகிய நான்கு இணையத் தள முறைமைகளும் புதிய வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன.
இம்முறைமைகள் ஊடாக பொதுமக்களின் தேவைகள் துரிதமாக நிறைவேற்றப்படுவதுடன், அலுவலக சேவைகள் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் தொழில்நுட்பமயமான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதேச செயலக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) பிரிவு உத்தியோகத்தர் எம்.எம். ரசுல்ஷா அவர்களினால் தெரிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டம் அரச சேவைகளை இலத்திரனியல் மயமாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும் கருதப்படுகின்றது.
பிரதேச செயலகம் – காத்தான்குடி
.























