மட்டக்களப்பு மாவட்டத்தில் “பிரஜா சக்தி” வேலைத்திட்டம் தொடர்பான விசேட விழிப்புணர்வு கூட்டம்மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த பிரஜா சக்தி தவிசாளர்கள், செயலாளர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கான விசேட விழிப்புணர்வு கூட்டம் நேற்று (11) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரசாங்கத்தின் “பிரஜா சக்தி” வேலைத்திட்டம் தொடர்பாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ கலந்து கொண்டு விசேட உரையாற்றினார். மேலும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டு திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் மக்களுக்கான சேவைகள் குறித்து விளக்கமளித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பல அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.மக்களின் சமூக மற்றும் பொருளாதார வலுவூட்டலை முன்னிறுத்தும் “பிரஜா சக்தி” வேலைத்திட்டத்தை கிராம மட்டத்தில் திறம்பட செயல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.


















