மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக காத்தான்குடியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை (02) ஆந் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களுக்கு வருகை தர முடியாமல் தங்களது வீடுகளில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு காத்தான்குடி ஹைறாத் பள்ளிவாயல் நிருவாகத்தினரால் சமைத்த உணவு வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இக் களவிஜயத்தின் போது காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் சயந்தன், மாவட்ட இடர் முகாமைத்துவ உத்தியோகத்தர் சுரேஸ் , மாவட்ட ஊடக தகவல் அதிகாரி வீ.ஜீவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






















