மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டிலும் காத்தான்குடி பிரதேச செயலக அனர்த்த நிவாரணப் பிரிவின் ஒழுங்கு படுத்தலிலும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அனர்த்த அபாய குறைப்பு முகாமைத்துவம் தொடர்பான சான்றிதழ் கற்கை நெறியின் ஆரம்ப நாள் நிகழ்வு 2023.11.21 ஆந் திகதி மாவட்ட அனர்த்த பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் அவர்களது தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கற்கை நெறியில் மண்முனை வடக்கு, மண்முனைப்பற்று ஆரையம்பதி, மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 90 இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர்
இக் கற்கை நெறியில் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள், அவசர கால நிலைமைகளில் எவ்வாறு செயற்படுதல் வேண்டும், நீச்சல் பயிற்சி மற்றும் முதலுதவிப் பயிற்சிகள் நேரடியாகவும் Zoom மூலமாகவும் இடம்பெறவுள்ளதுடன் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு அதிதிகளாக , காத்தான்குடி பிரதேச செயலாளர், மண்முனை வடக்கு மற்றும் மண்முனைப்பற்று, ஆரையம்பதி பிரதேச செயலாளர்கள், காத்தான்குடி நகரசபை செயலாளர், மற்றும்
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த நிவாரண உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.






















