No Drugs நாங்கள் Youth "போதைப் பொருள் அற்ற இளைஞர் தலைமுறை " எனும் தொனிப்பொருளில் போதைப் பொருள் தடுப்பிற்காக மாணவர் தலைவர்களுக்கான இரண்டாம் நாள் விழிப்புணர்வு செயலமர்வானது 2023.11.13 ஆந் திகதி திங்கட்கிழமை
உதவி பிரதேச செயலாளர் திருமதி. MS. சில்மியா அவர்களது
தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி. ஜேசுதாசன் கலாராணி அவர்கள் அதிதியாக கலந்துகொண்டனர்.
இச் செயலமர்வில் காத்தான்குடி மீரா பாலிகா , மத்திய கல்லூரி, மற்றும் காங்கேயனோடை அல் அக்ஸா ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 25 மாணவர் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்நிகழ்வின் வளவாளர்களாக பிரதேச செயலக போதை முற்தடுப்பு உத்தியோகத்தர்களான P.சந்திர காந்தன், S.கோவிந்தராசா, CRPO திருமதி. உர்மிலா, நீதி மற்றும் சிறைச்சாலைகள் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் M. றசூல்ஸா, WDO திருமதி. URB. றஸ்மின், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட போதை தடுப்பு பிரிவின் பயிற்றுவிப்பாளர் S. சதீஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர் தலைவர்களுக்கு சான்றிதழ்களை உதவி பிரதேச செயலாளர் , மக்கள் சமூக நல மேம்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் தேசபந்து அல்-ஹாஜ். MIM.ஹாரிஸ் (JP), முன்னாள் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் NM. பாயிஸ் மற்றும் வளவாளர்கள் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.






















