பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் செயலணியினரின் பிரதேசமட்ட திட்டமிடல் 2ம் அமர்வு பயிற்சி பட்டறையானது 2023.11.06 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் IWARE நிறுவனத்தின் பங்களிப்புடன் காத்தான்குடி Beachway hotelல் இடம் பெற்றது.
இப்பயிற்சிப் பட்டறையில் திருமதி. சுபத்திரா யோகசிங்கம் மற்றும் A.சொர்ணலிங்கம் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வில் காத்தான்குடியில் இயங்கி வருகின்ற GBV Forum இன் செயற்பாடுகளை நெறிப்படுத்தி செயலணிக்கான Terms of Reference ஐ வரைவதன் மூலம் மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்தது பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை கையாளும் செயற்திறனான பொறிமுறைகளை உருவாக்குதல் தொடர்பில் பல்வேறு தலைப்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, காழி நீதிபதி, சமுர்த்தி தலைமை முகாமையாளர், கிராம உத்தியோகத்தர் நிர்வாக உத்தியோகத்தர், நகரசபை நிர்வாக உத்தியோகத்தர், மத்தியஸ்த சபை தவிசாளர், பொலிஸ் உத்தியோகத்தர, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,ஊடகவியலாளர் கள் என பலரும் கலந்து கொன்டனர்.
























