தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடானது கையளிக்கும் நிகழ்வு 2023.10.23 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் இடம் பெற்றது.
இவ்வீடானது சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 750000/= நிதியுதவியுடனும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் சக்காத் திட்டத்தில் 750000/=
நிதிப் பங்களிப்பும் அத்துடன் ஏனைய சில தனவந்தர்களின் 300000/= நிதிப் பங்களிப்புடனும் 180000 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடானது 167B புதிய காத்தான்குடி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் எஸ்.எவ்.சபானா எனும் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 250000/= நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட மூன்று வீடுகளும் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஆரிபா ஜமநுல்லா கலந்து கொண்டதுடன் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா , கணக்காளர் செல்வி.கே.சித்ரா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ்,சமுர்த்தி முகாமையாளர்கள், காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
























