காத்தான்குடியில் துரிதமாக வளர்ந்து வரும் சுற்றுலா துறையை ஒழுங்கு படுத்திக் கட்டமைத்தல் தொடர்பான கூட்டமானது (12) ஆந் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.
எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் சமூகத் தலைவர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், NGO's, INGO's உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தின் போது வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையை எவ்வாறு ஒழுங்கமைத்தல், சுற்றுலா துறைக்கான வளங்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளைக் கையாளுதல் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான சுற்றுலா தொடர்பான Calender தயாரித்தல், சுற்றுச்சூழல், கலாசார ரீதியான பிரச்சனைகள் ஏற்படாத வகையில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்தல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


















