காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுவர் பெண்கள் பிரிவும் மற்றும் சமுர்த்தி பிரிவும் இணைந்து சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் தின நிகழ்வுவினை 2023.10.01 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் இடம்.பெற்றது.
 
இந் நிகழ்வின் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் மற்றும் பொறியியலாளரும் சிரேஸ்ட விரிவுரையாளர் ,(தென்கிழக்கு பல்கலைக்கழகம்) ஏ.எல்.றிசாத் அவர்கள் பிள்ளை வளர்ப்பு பற்றி கருத்து தெரிவிக்கையில் பிள்ளைகளின் உடல் உள , கல்வி, சுகாதாரம், போசாக்கு போன்றவை பிள்ளை வளர்ப்பில் முக்கியமானவை ஆகும். யப்பான்,சீனா, பின்லாந்து, ஆகிய நாடுகளில் பிள்ளை வளர்ப்பு முறை வித்தியாசமானது. அங்கு பிள்ளைகளின் உடல் உள வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.சீனாவில் பெற்றோர் பிள்ளை விழுந்து விடும் என தடுப்பதை விட பிள்ளை விழுந்து எழுந்து கற்கும் அனுபவ கல்விக்கு முன்னுரிமை வழங்குகின்றது.
மேலும் உணவு எனும் விடயத்தில் 80%  உணவு உட்கொள்ள வேண்டும் 20% வயிற்றில் இடைவெளி இருக்க வேண்டும் இந்த விடயம் இஸ்லாத்திலும் கூறப்பட்டுள்ளது. ஒரு மனிதன் 40 வயதிற்கு பின்னர் தான் வாழ ஆரம்பிக்கின்றான்.
அதுவரை வளர்க்கப்பட வேண்டியவனாக இருக்கின்றான். மனிதன் உழைப்பதன் நோக்கம் மகிழ்ச்சியாக வாழ்வதற்காகத்தான் அந்த மகிழ்ச்சியான வாழ்வை பெறுவதற்கு சிறந்த பிள்ளை வளர்ப்பு, உணவு முறைமை என்பன முக்கியமாகின்றது. Ikigai எனும் நூலில் Japanese secret to long and happy life பற்றி கூறப்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவுப்பழக்கம், சுகாதார மேம்பாடு என்பது முக்கியமானது போன்ற பல்வேறு சிறப்பான கருத்தாழம் நிறைந்த விடயங்களை சிறுவர் தின சிறப்புரைகளில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிகழ்வின் அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர், மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர்கள், நிலைய பொறுப்பதிகாரி, சிறுவர் நன்னடத்தை அலுவலகம்,நிலைய பொறுப்பதிகாரி, சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸ் நிலையம், பணிப்பாளர் (Iware), பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி, நிறைவேற்றுப் பணிப்பாளர் பெண்கள் காப்பகம், காத்தான்குடி, தலைவர்,ஜம்இஈதுல்லா உலா, தலைவர், சிறுவர் அபிவிருத்தி நிலையம், சட்டத்தரணி எம்.உவைஸ் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந் நிகழ்வின் போது பாலர் பாடசாலை சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் கெக்குலு சிறார்களுக்கான போட்டியில் வெற்றி பெற்ற சிறார்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
 
 
 

News & Events

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

News & Events

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
Aug2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
Jul2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top