கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது (25) ஆந் திங்கட்கிழமை திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தின் போது அனைத்து உத்தியோகத்தர்களும் KPI யில் குறிப்பிட்டவாறு மூன்றாம் காலாண்டிற்கான செயற்பாடுகள் அனைத்தையும் நிறைவு செய்யுமாறு பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அடுத்து சமூக நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்காக விண்ணப்பிக்காதவர்கள் மேன்முறையீடு செய்ய முடியாது எனவும் சமூக நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்காக தெரிவு செய்யப்பட்ட 3354 பயனாளிகளில் 3058 பேருக்கு வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது. இதில் 2153 பயனாளிகளுக்கு பணம் வைப்பிலிடப் பட்டுள்ளது.905 பேருக்கு வங்கி கணக்குகள் திறக்கப்பட்டு அவை சரிபார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சரிபார்க்கப்பட்டதன் பின் அவர்களுக்கான பணம் வைப்பிலிடப்படுமென சமூக நலன்புரி அபிவிருத்தி உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சமூக நலன்புரி நன்மைகள் சபையினால் நியமிக்கப்பட்ட மேன்முறையீட்டுக் குழுவினால் மேன்முறையீடுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து கருத்திட்ட முகாமையாளர், DCO, கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடம் வேலை முன்னேற்றம் தொடர்பாக பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




















