சுற்றுலா அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் சுற்றுலா துறையை மேம்படுத்தி அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
அந்தவகையில்
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சுற்றுலா துறை தொடர்பாக வர்த்தக சமூகத்துடனான கலந்துரையாடல் 2023.09.12 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா , மற்றும் காத்தான்குடி வர்த்தக சங்க பிரதிநிதிகள், வர்த்தக முன்னோடிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
சுற்றுலா அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் சுற்றுலா துறையை மேம்படுத்தி அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
அந்தவகையில்
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சுற்றுலா துறை தொடர்பாக வர்த்தக சமூகத்துடனான கலந்துரையாடல் 2023.09.12 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா , மற்றும் காத்தான்குடி வர்த்தக சங்க பிரதிநிதிகள், வர்த்தக முன்னோடிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
அதன் தொடர்பில் காத்தான்குடியில் சுற்றுலா துறை தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் காத்தான்குடி வர்த்தக சங்க பிரதிநிதிகளால் சுற்றுலா துறை தொடர்பான திட்ட முன்மொழிவு ஒன்றும் பிரபல வர்த்தகரான எஸ்.எல்.எம்.ஆரிப் அவர்களினால் திட்ட முன்மொழிவு ஒன்றும், பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.






















