காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டமானது 2023.08.08 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக விதாதா வள நிலையத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் 167A,167B,167C , ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வாடி அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்விற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை உதவிப் பணிப்பாளர், E-Planer, நில அளவையாளர், மற்றும் மாவட்ட மீன்பிடி உத்தியோகத்தர், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்,கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள் (167A,167B,167C) , காணிப்பயன்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர், காணிக்கிளை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
















