கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது இன்று (17) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் Syscgaa ஊடாக Advance programme மற்றும் Diary சமர்ப்பிக்கும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் அதனை குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் அதனை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் தேசிய ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலுக்கமைவாக தெரிவு செய்யப்பட்ட 3354 பயனாளிகளுக்கு இம்மாத இறுதிக்குள் வங்கிகளினூடாக கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் 5116 மேன்முறையீடு கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சமூக நலன்புரி உத்தியோகத்தரினால் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ECDO,LAND,DMC, HRDA,,WDO,DO(மத்தியஸ்த சபை) , மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர், புள்ளி விபரத்திணைக்கள உத்தியோகத்தர், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகிய உத்தியோகத்தர்களிடம் வேலை முன்னேற்றங்கள் தொடர்பாக பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






















