Legal Aid Commission சட்டத்தரணிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் ஊடகங்கள் ஊடாக சிறுவர் பெண்களுக்கு ஏற்படும் துஸ்பிரயோகம் மற்றும் அடிப்படை உரிமைகள் மற்றும் உரிமை மீறல்களுக்கான நிவாரணங்கள் தொடர்பான பயிற்சி செயலமர்வு 2023.12.14 ஆந் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் சிறுவர் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.ஆர்.வீ.றஸ்மீன் அவர்களது ஒருங்கிணைப்பில் IWARE அலுவலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இச்செயலமர்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா, மற்றும் நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப் , நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் ,
சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
வளவாளர்களாக சட்டத்தரணி FX.விஜயகுமார், LLB,MPhil கே.கிறிஸ்ணகுமார், நுகர்வோர் அதிகாரசபையின் Investigation Officer அகமட் நபார், மற்றும் ரீ.சுதர்சன், சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணிகளான திருமதி.மிருதினி சுரேஸ்குமார், திருமதி.கஜாலினி ஹரிபிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால சிங்கள பாடநெறியின் 2ம் கட்ட ஆரம்ப நிகழ்வு 2023.12.14 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களினால் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்பாடநெறியில் 71 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளராக என்.துஜோகாந் அவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஆரம்ப நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.







பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பதற்கான 16 நாள் செயல்வாதத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகமும் IWARE மகளிர் அமைப்பும் இணைந்து சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்புடன் 2023.12.12 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பாடசாலை மாணவிகள் மற்றும் GBV Forum பங்குதாரர்களுக்கும் இரண்டு கட்டங்களாக செயலமர்வு காத்தான்குடி Beach Way Hotel இல் இடம்பெற்றது.
முதல் கட்டமாக மட்/ அல் அமீன் வித்தியாலயம் மற்றும் மட்/பதுரியா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 10,11 ல் கல்வி கற்கும் 350 மாணவிகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வளவாளராக பெண் நோயியல் வைத்திய நிபுணர் Dr.சிராஜ் அவர்கள் கலந்து கொண்டு விழிப்பூட்டல்களை வழங்கியிருந்தனர்.
அடுத்து இரண்டாம் கட்ட அமர்வானது GBV Forum பங்குதாரர்களுக்கு நடைபெற்றது.
இச் செயலமர்வின் வளவாளராக பெண் நோயியல் வைத்திய நிபுணர் Dr.சிராஜ் மற்றும் உளநல வைத்திய அதிகாரி Dr.Daan ஆகியோர் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது .
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் MS.சில்மியா,பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம நிருவாக உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி தலைமை முகாமையாளர், MOH, பொலிஸ் சிறுவர் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி, சிறுவர் நன்நடத்தை திணைக்கள பொறுப்பதிகாரி, மத்தியஸ்த சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், PHM, SPHM, PHI , SPHI ஆகியோர் கலந்து கொண்டனர்.
.



.






















