காத்தான்குடி பிரதேச செயலகத்தின் வாணி விழா கொண்டாட்டமானது 2023.10.23 ஆந




திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் மஞ்சந்தொடுவாய் சிறி சித்தி விநாயகர் ஆலயத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இவ் விழாவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் சிறார்களினால் பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் அவர்களது திறமைகளைப் பாராட்டி பிரதேச செயலாளரால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் விழாவினை காத்தான்குடி பிரதேச செயலக இந்து உத்தியோகத்தர்கள் மிகவும் இறைபக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



















