காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னாயத்தமாதல் மற்றும் அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தல் கூட்டமானது 2023.10.10 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
 
இக் கூட்டத்தில் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு தடையாக இருக்கும் மற்றும் அனர்த்தம் ஏற்படக்கூடிய இடங்களை இனங்கண்டு அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளினை துரிதப்படுத்த களவிஜயம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டதுடன், அனர்த்த நிலைமைகளின் போது நிவாரண சேவையினை துரிதப்படுத்தல், அனர்த்த முன்னாயத்த திட்டம் தயாரித்தல் மற்றும் பிரதேச இளைஞர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பயிற்சியளித்தல் , அனர்த்த நிலைமைகளின் போது 
ஏற்படுகின்ற வதந்திகள் பற்றிய விழிப்புணர்வு அத்துடன் சுனாமி, நிலநடுக்கம் தொடர்பாக மக்களை விழிப்பூட்டல் ஆகிய விடயங்கள் சம்பந்தமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
 
 அத்துடன் மழை காலங்களில் வெள்ளபெருக்கு ஏற்படும் போது உடையக்கூடிய கழிவு நீர் தொட்டிகளை திருத்தம் செய்வதற்காக மக்களுக்கான தெளிவுபடுத்தல்களை வழங்குமாறு  நகரசபைக்கும் தெரிவிக்குமாறு SPHI இடம் தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மற்றும் வீடுகளில் தங்கி வாழும் மக்களுடைய எண்ணிக்கை  ஆகியவற்றை துல்லியமாக ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் பிரதேச செயலகத்திற்கு அறிக்கையிடுமாறு கிராம உத்தியோகத்தர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
ஒக்ரோபர் மாதம் முழுவதும் வெள்ள அனர்த்த மாதமாக கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 
இக் கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.றியாஸ், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், காத்தான்குடி பிரதேச செயலக அனர்த்த நிவாரண  உத்தியோகத்தர், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர், மற்றும் ஆதார வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, நகரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, பொலிஸ், கடற்படை, CTB,CEB,  மிருக வைத்திய அதிகாரி,ஜாமியத்துல்உலமா , அனைத்து பள்ளிவாயல் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், கிராம உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top