கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அணுசரணையில் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பிரிவு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் "கவிதை இரசனை"வேலைத் திட்டத்தின் கீழ் கவிதை பயிற்சிப்பட்டறை யானது 2023.05.30 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சிப்பட்டறையில் 60மாணவர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளர்களாக வித்தியாகீர்த்தி இளங்கோ அமிர் அலி (BA), மற்றும் கவிதாயினி Ms.ஜுஸ்லா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.
இப்பயிற்சிப்பட்டறையானது கவிதைத்துறையில் மிளிரத்தக்க வகையில் மரபுக் கவிதை, நவீன கவிதை, பற்றிய தெளிவான விளக்கங்களும் , பயிற்சிகளும் அத்துடன் கவிதைகள் வாசிக்கும் முறைமைகள் போன்றவற்றுக்கான பயிற்சியினை வளவாளர்கள் சிறப்பான முறையில் மாணவர்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















