மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் ஏற்பாட்டிலும் காத்தான்குடி பிரதேச செயலக அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பிலும் சுனாமி மற்றும் நிலநடுக்கம் போன்ற அனர்த்தங்களுக்கான பிரதேச செயலக மட்ட அனர்த்த முகாமைத்துவ பங்குதாரர்களுக்கு அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான முகாமைத்துவ கருத்தரங்கானது 2023.05.22 ஆந் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கருத்தரங்கானது அண்மைக் காலமாக ஏற்படும் நில அதிர்வு தொடர்பாகவும், சுனாமி ஏற்படும் காரணங்கள், மற்றும் எவ்வாறு பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் போன்ற முன்னெச்சரிக்கை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இக் கருத்தரங்கில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு.ஏ.எஸ்.எம்.சியாத், மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் சிரேஸ்ட விரிவுரையாளர் (புவியியல் தொடர்பான) திரு.கே.கிருபைராஜா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பாக தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி கருத்தரங்கில் நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், நகர சபை உத்தியோகத்தர்கள், நூறாணியா, பதுறியா, மத்திய மகா வித்தியாலயம், அன்வர் வித்தியாலயம், ஆகிய பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




















