தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஒரு நாள் பயிற்சி செயலமர்வானது 2023.03.15 ஆந் திகதி புதன்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி.MS.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் 50 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளர்களாக (Officer's Transparency International) திருமதி.பிரியா போல் ராஜ் மற்றும் திருமதி.ஜவாஹிர் நாகூர் ஆகியோர் கலந்து கொண்டு தகவல் அறியும் சட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தனர்.
இந் நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர் திருமதி.SJM.ஜலால்தீன், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.MMM.ஜரூப், கிராம உத்தியோகத்தர்கள்,
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்விற்கு LIFT NGO (Project Coordinator) திரு. ரீ.சுதர்சன் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




















