நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு 2022.05.24 ஆந் திகதி முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஒரு குடும்பத்திற்கு ரூபா 2500.00 பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்விற்கு உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், சர்வோதய இணைப்பாளர் திரு.கரீம், மற்றும் டயலொக் மாவட்ட கிளை முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


















