YMCA நிறுவனத்தினால் அங்கவீனமுற்ற பிள்ளைகளுக்கு போக்குவரத்து கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு 2022.01.26 ஆந் திகதி புதன் கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சமூக சேவை உத்தியோகத்தர் திரு.எஸ்.ஏ.சீ.நஜிமுதீன் அவர்கள் தலைமையில் சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.எம்.சில்மியா அவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.இந்நிகழ்வானது முற்றாக இயலாத 03 பிள்ளைகளுக்கு போக்குவரத்து கொடுப்பனவாக இரண்டு பயனாளிகளுக்கு ரூபா 3000/= வீதம் ரூபா 6000/= உம் ஒருவருக்கு ரூபா 3500/= உம் மொத்தமாக ரூபா 9500/= உதவிப்பிரதேச செயலாளரால் காசோலையாக வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பயனாளிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ராதிகா அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.















