காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிர்வாகக் கிளையில் கடந்த 2021.2.10ம் திகதி புதன்கிழமை அன்று பிற்பகல் 3:15 மணி அளவில் முதலுதவிப் பயிற்சி ஒன்று இடம்பெற்றது. இப்பயிற்சியை திருமதி P.சிந்துஜா அவர்கள் வழங்கியிருந்தார். இதன்போது அவசரமானதும் அவசியமானதுமான முதலுதவியை எவ்வாறு மேற்கொள்வது? முதலுதவியின் நோக்கம் என்ன? முதலுதவி பயிற்சியை பெறுவதனால் கிடைக்கும் நன்மைகள் எவை? முதலுதவி பெட்டியில் உள்ள பொருட்கள் எவை? பொருட்களின் பாவனை முறை என்ன? போன்ற பல முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இத் தரவலையத் திட்டமானது அலுவலக உற்பத்தித்திறன் ஒருங்கிணைப்பாளரும் நிர்வாக உத்தியோகத்தருமான திருமதி SJM.ஜலால்தீன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்றிருந்தது. இதன்மூலம் தங்கநிலா தரவளைய சகல அங்கத்தவர்களும் முதலுதவியின் அவசியம் மற்றும் புதிய பயன்பாடுகள் தொடர்பில் அறிவூட்டல் பெற்றுக்கொண்டமையும் சிறப்பம்சமாகும்.















