இலங்கை தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் காத்தான்குடி பிரசே செயலகம் அகில இலங்கை ரீதியில் இரண்டாமிடத்தினை பெற்று எமதூருக்கும் மாவட்டத்திற்கும் பெறுமை சேர்த்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
இவ்வெற்றியினை கொண்டாடும் நிகழ்வு கடந்த 02.01.2019ம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் இவ்வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டது. மேலும் எமது அடுத்த இலக்கான முதலாமிடத்தினை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும் முழு மூச்சுடன் செயற்பட வேண்டுமென பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.
தகவல் தொழிநுட்பத்தினை அமுல்படுத்தும் ஆண்டாக 2018ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
















