காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ... நிறுவனத்தின் அனுசரனையுடன் நவீனமயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரசே செயலகத்திற்கு சேவை பெறவரும் ஒவ்வொரு சேவைபெறுவனரும் இதில் பதிவு செய்யப்படுவதுடன் அவர்களுக்கு சேவை தொடர்பான சிட்டையும் வழங்கி வைக்கப்படும். அதனை உரிய அதிகாரியிடம் காட்டிய பின்னர் தமது சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
சேவைபெறுனர் முதல்தடவை மாத்திரமே தங்களது பெயர் விபரங்களைக் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். மீண்டும் வருகைதரும்போது தங்களது அடையாள அட்டை இலக்கம் அல்லது தொலைபேசி இலக்கத்தனை வழங்கி சிட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் குறித்த சேவைக்கு விண்ணப்பித்த பின்னர் தாங்கள் விண்ணப்பித்த சேவை முடிவடைந்து விட்டதா என்பதை அறிந்து கொள்ள இதற்கொன பிரத்தியோகமாக அமைப்பட்டுள்ள தொடுதிரையின் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட சிட்டையில் உள்ள விண்ணப்ப இலக்கத்தினை வழங்கி பெற்றுக் கொள்ளலாம்.















