சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உயர்தர மாணவர்களுக்கான சமுர்த்தி சிப்தொற புலமைப் பரிசில் கொடுப்பனவு காசோலை வழங்கும் நிகழ்வானது 12.03. 2025 புதன்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிகாரா மௌஜுத் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 2024/ 2026 வருடத்தில் உயர்தரத்தில் கல்வி கற்று 2026 ஆம் வருடம் உயர்தர பரீட்சை எழுதும் 108 மாணவர்களுக்கு கடந்த 2024 ஜூலை தொடக்கம் டிசம்பர் வரையான ஆறு மாதங்களுக்கு தலா 9000/= ரூபாய் காசோலையானது பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இப்புலமைப்பரிசானது காத்தான்குடி மத்திய கல்லூரி, காத்தான்குடி மீரா பாலீகா மகா வித்தியாலயம், மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் அல்ஹிரா மகா வித்தியாலயம், அல் அமீன் மகா வித்தியாலயம், புலவர் மணி சரீப்தீன் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உதவி பிரதேச பிரதேச செயலாளர் திருமதிஎம்.எஸ். சில்மியா அவர்களினால் சிப்தொற புலமைப் பரிசு தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி .எஸ்.தனுஜா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி .பீ.ஜெயராஜ், மற்றும் சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை





மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





















