பாடசாலை மாணவர்களுக்கான கதை கூறுதல் போட்டி
தொளஸ் மகே பஹன வேலைத்திட்டத்தின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைவாக காத்தான்குடி பிரதேச செயலக கலாசாரப்பிரிவின் ஒழுங்கமைப்புடன் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் வழிகாட்டலில் பாடசாலை மாணவர்களுக்கான கதை கூறுதல் போட்டியானது 2023.12.13 ஆந் திகதி புதன்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இப் போட்டியில் 120 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக் காட்டியிருந்தார்கள்.
இப் போட்டியில் மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், யோ.தனுஷியா, பிரதேச செயலகம் , மண்முனை வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.புஸ்பகீதா, மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வ.அருணகிரிநாதன் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் நளீம், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்துஉஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.















