பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக் குழு கூட்டமானது 2023.10.17 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தின் போது 167E கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மட்/ம ம/ஸாவியா மகளிர் வித்தியாலயம் அமைந்துள்ள காணி மாகாண கல்வி திணைக்களத்தின் கோரிக்கைக்கமைவாக கையளிப்பு செய்வதற்கு சிபாரிசு வழங்கப்பட்டதுடன் 2017.03.28 ஆண்டு மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுவினர் 176B கிராம உத்தியோகத்தர் பிரிவில் உளநலப் பிரிவு அமைப்பதற்கு வழங்கப்பட்ட 50 Perch காணியினை இரத்துச் செய்வது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டது.
இக் கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர் ( LUPO) ஆர்.கணேசன், திருமதி.எம்.பாஸ்கரன், (Coast Conservation), மற்றும் ஏ.எல்.பாஸில் (Servey Dept), நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர் எம்.செல்வகுமார் (E/Planner) , எம்.ஐ.எம்.நியால் (UC AO) 167B கிராம உத்தியோகத்தர் திருமதி.பஜ்றியா அமிர் அலி, காணிப் பயன்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.கார்த்தீபன், காணிக்கிளை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி எம்.எம்.எவ்.ஹஸீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.


















