காத்தான்குடியில் காத்தான்குடியில் துரிதமாக வளர்ந்து வரும் சுற்றுலா துறையை ஒழுங்கு படுத்தி கட்டமைத்தல் தொடர்பாக தங்குமிட வசதி வழங்குனர்களுடனான கூட்டமானது 2023.09.26ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் வளர்ந்து வரும் சுற்றுலா துறையில் தங்குமிட வசதி வழங்குனர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும், சுற்றுலா துறைக்கு பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்துதல், அதனை எவ்வாறு ஒழுங்கு படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், காத்தான்குடி நகரசபை செயலாளர், மற்றும் தங்குமிட வசதி வழங்குனர் சங்க உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




















