தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக காத்தான்குடியில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையானது சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலிலும் 26,27,30, ஆகிய திகதிகளில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
அந்தவகையில் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்பு பெருகக்கூடிய ஆபத்தான இடங்களை பார்வையிட்டு அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















