சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மூன்று வீடுகளில் மூன்றாவது வீடான 167B புதிய காத்தான்குடி கிழக்கு பிரிவில் வசிக்கும் எவ்.சபானா என்பவரது சௌபாக்கியா ரன்விமன 3வது வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 30.08.2023 ஆந் திகதி புதன்கிழமை உதவி பிரதேச செயலாளார் திருமதி .எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை முகாமையாளர், வலய முகாமையாளர், சமூக அபிவிருத்தி உதவியாளர், காத்தான்குடி பள்ளி வாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பைத்துல் சக்காத் நிதிய தலைவர் T.M அன்சார் , மற்றும் உறுப்பினர்களும் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசாங்கத்தினால் இவ் வீட்டிற்காக ரூ.750,000/= நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






















