சமுர்த்தி உதவி பெறும் வறுமையான குடும்பத்தில் உள்ள பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கமைவாகவும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தரின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடியைச் சேர்ந்த தனவந்தரிடமிருந்து 5 பாதணிகள் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன்
அதனை 166A, 167A ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு 2023.08.14 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களால் மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அன்சார் கலந்து கொண்டிருந்தார்.


















