கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக வாய்மொழி, கையெழுத்து மூலமான போட்டிகளை மாணவர்களின் இலக்கிய ஆற்றுகை, மற்றும் கலை ஆகியவற்றின் வெளிப்பாடுகளை ஊக்கப்படுத்துவதற்காக வருடாவருடம் பிரதேச மட்ட இலக்கிய போட்டித் தொடர் இடம் பெற்று வருகின்றது.
அந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான பிரதேச மட்ட இலக்கிய போட்டித் தொடரானது 02, 08.08.2023 ஆகிய இரு தினங்களில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இப் போட்டித் தொடரில் 180 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் நடுவர்களாக இசைத்துறை விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம்,கல்லடி பிரிசில்லா ஜோர்ஜ், காத்தான்குடி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.யுவசாந்தி சிறிஸ்காந்த ரூபன், திருமதி.ரேணுகா அர்ச்சுனன், திருமதி.டிஜிசார்தினி தேவரூபன், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், மண்முனை வடக்கு திருமதி.தானியா தனுசாந், அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலகம், மட்டக்களப்பு யோகேந்திரன் தனுஷியா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டித் தொடரானது கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்து உஷா, WDO யூ.ஆர்.எஸ்.றஸ்மின், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி.எச்.பீ.எம்.சில்மி தாஜுதீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.எவ்.நுஹா ஆகியோரின் ஒழுங்கு படுத்தலில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.




















