கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் கலைஞர்களுக்கு உதவிக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இவ்வருடமும் கலைஞர்களுக்கு (ரூ.10000) உதவிக் கொடுப்பனவு வழங்குதல் நிகழ்வானது 2023.08.07 ஆந் திகதி திங்கட்கிழமை செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக் கொடுப்பனவுகள் எஸ்.எல்.நஜிமுதீன், எம்.ஐ.எம்.முஸ்தபா, ஏ.எம்.அப்துல் அஸீஸ், ஆகிய ய மூன்று கலைஞர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான எம்.ஏ.சி.ஜெய்னுலாப்தீன், யோ.தனுசியா, காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்து உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.


















