சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு வேலைத் திட்டம் -2023 வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 164 C கிராம உத்தியோகத்தர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட மூன்று வீடுகளில் முதலாவது வீடான எஸ்.எம்.மாஜிதா என்பவரது வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2023.07.26 ஆந் திகதி புதன்கிழமை சமூக அபிவிருத்தி உதவியாளர் எம்.எஸ்.அன்சார் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், முகாமைத்துவப் பணிப்பாளர் ஆர்.வாமதேவன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.எஸ்.கண்ணன், வலய முகாமையாளர் எம்.ஏ.எம்.சுல்பி, மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வீ.விஜயலக்ஸ்மன்
(சந்தைப்படுத்தல்) திருமதி.பு.ரதீஸ்காந்தி (CBO) , கருத்திட்ட உதவியாளர் ஏ.எல்.எச்.எம்.இப்றாஹிம், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் முகைதீன், தைக்கா பள்ளி வாயல் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் வீட்டிற்காக அரசாங்கத்தினால் ரூ.750,000/= நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






















