ஆடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 167A மற்றும் 167B ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த இரண்டு பயனாளிகளுக்கு 2023.07.25 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களால் தலா மூன்று ஆடுகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு கால்நடை வைத்திய அதிகாரி SDM.மாஹிர், பிரிவிற்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான MMM.இர்ஷாத், மற்றும் கலீல்தீன், திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களான எம்.ஏ.எம்.நலீம், திருமதி.ராதிகா கோமதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


















