தேசிய உணவுப் பாதுகாப்பு வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி கிழக்கு 167B கிராம உத்தியோகத்தர் பிரிவு அன்பர் சமுதாய அடிப்படை அமைப்பின் நிதிப் பங்களிப்புடன் MMV 2ம் லேனில் அமைந்துள்ள ஏ.ஹிதாயத்தும்மா என்ற பயனாளியின் வீட்டில் செய்கை பண்ணப்பட்டிருந்த மரக்கறி வகைகள் அறுவடை செய்யும் விழாவானது 2023.07.18 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களால் அறுவடை செய்து வைக்கப்பட்டது.
இவ்வறுவடையில் வாழை, வெண்டி, கத்தரி,புடோல், பப்பாசி, கீரை போன்ற மரக்கறி வகைகள் அறுவடை செய்யப்பட்டது.
இவ்வறுவடை விழாவில் உதவிப் பிரதேச செயலாளர், கருத்திட்ட முகாமையாளர், கருத்திட்ட உதவியாளர், மற்றும் பிரிவிற்கு பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






















