கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது இன்று (19) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டத்தின் அனைத்து வேலைகளும் நிறைவு பெற்றுள்ளதாகவும் இப்பணிக்காக ஈடுபடுத்தப்பட்ட உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் பிரதேச செயலாளரால் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் உணவுப் பாதுகாப்பு வேலைத் திட்டத்தினை மிக விரைவாக அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நிறைவு செய்யுமாறு உதவிப் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
அத்துடன் பிரதேச செயலகத்தினால் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் போது அதனோடு தொடர்புடைய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும், கள உத்தியோகத்தர்கள் களவிஜயத்தினை மேற்கொள்ளும் போது வழங்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதி செய்து பிரதேச செயலாளருக்கு அறிக்கையிடப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
 
வெளிக்கள உத்தியோகத்தர்கள் கள விஜயத்தின்போது  டெங்கு மற்றும் தொற்றா நோய் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கும் , பொது மக்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டுமெனவும் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளிநாட்டில் தொழில் புரியும் மற்றும் தொழில் புரிந்து 2 வருடங்களில் நாடு திரும்யுள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ரூபா  8000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாக   வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரினால் தெரிவிக்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து காணி, முதியோர் செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர், WDO, PDO, ஆகிய உத்தியோகத்தர்களிடம் வேலைகள் தொடர்பான முன்னேற்றங்களை பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.
 
இக் கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
අගෝ2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ජූලි2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top